Saturday, September 17, 2011

செனல் 4 காணொளி ஹேக் நீதிமன்றத்தில்!

Saturday, September 17, 2011
செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களம் காணொளி, நெதர்லாந்தின், ஹேக் நீதிமன்றத்தில் காண்பிக்கப்படவுள்ளது.

புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைதான 5 இலங்கையர்கள் தொடர்பிலான வழக்குக்கு, ஆதரமாக இந்த காணொளி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் சந்தேக நபர்கள்,புலிகளுக்கு நிதி வழங்கினார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை எனவும், அவர்கள் விடுதலைப் போராளிகள் எனவும், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி விக்டர் கொப்பே வாதிட்டுள்ளார்.

எனவே புலிகளுக்கு நிதி வழங்கியது சட்ட விரோதமானது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புலிகள், பயங்கரவாதிகள் அன்றி, விடுதலை போராளிகள் என்ற தமது வாதத்துக்கு ஆதாரமாக காண்பிப்பதறாகாக, செனல் 4 தொலைக்காட்சியின் காணொளியை நீதிமன்றத்தில் திரையிட கோரியுள்ளார்.

இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மூன்று வாரங்களில் புலிகள் பயங்கரவாதிகளா? அல்லது விடுதலைப் போராளிகளா என் ஹேக் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு, பேராசிரியர் ராஜிவ விஜேசிங்கவிடம் தொடர்பு கொண்டு வினவியது.

இதன் போது அவர் இவ்வாறான பதிலை வெளியிட்டார்.

No comments:

Post a Comment