Friday, September 30, 2011

2010ம் ஆண்டில் ஆயுதம் வாங்கியதில் இந்தியா முன்னிலை!

Friday, September 30, 2011
வாஷிங்டன் : கடந்த 2010ம் ஆண்டில் ஆயுதங்கள் வாங்கியதில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்தது. அந்த வகையில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக ரூ.28,420 கோடி மதிப்பில் ஆயுதங்களை இந்தியா வாங்கியதாக அமெரிக்க காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 2010ல் ரஷ்யாவிடம் ரூ.7,350 கோடி மதிப்பிலான 29 எம்ஐஜி&29கே போர் விமானங்கள், இங்கிலாந்திடம் 57 ஹவாக் ஜெட்கள், இத்தாலியிடம் 12 ஏடபிள்யூ 100 ஹெலிகாப்டர்களையும் இந்தியா வாங்கியுள்ளது.

இதுபோன்று ஆயுதங்கள், கருவிகள் வாங்கியதில் இந்தியா முதலிடமும், தைவான், சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. மேலும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா பெற்றுள்ளது.

வளரும் நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தங்களிதி அமெரிக்கா, ரஷ்யா முதல் 2 இடங்களில் உள்ளன. உலக அளவில் 2010ம் ஆண்டில் ஆயுதங்கள் பரிமாற்ற ஒப்பந்தங்களின் மதிப்பு ஸி1.98 லட்சம் கோடி. 2009ல் இது ரூ.1.87 லட்சம் கோடியாக இருந்து. ரஷ்யா தெற்கு ஆசியாவுக்கு நவீன ஆயுதங்கள் வழங்குவது கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment