Tuesday, September 06, 2011சென்னை;இந்திய கடல் எல்லைக்குள், அத்துமீறி புகுந்த இலங்கை மீனவர்கள் 10 பேரை, கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.இந்திய கடல் எல்லைக்குள், இலங்கை மீனவர்கள் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
நேற்று ஆந்திர மாநிலம், கிருஷ்ணாம்பட்டினம் பகுதியில், கடலோர காவல் படையினர் ரோந்து சென்ற போது, இரண்டு விசைப்படகுகளில், 10 இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை, கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.பத்து பேரும், கடல் மார்க்கத்தில் சென்னை நோக்கி கொண்டு வரப்படுகின்றனர். இன்று காலை, சென்னை துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவர் என, கடலோர காவல் படையினர் கூறினர். இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment