Wednesday, August 31, 2011

கொழும்பு துறைமுகத்தில் கப்பல்கள் தடுத்து வைப்பு!

Wednesday,August,31,2011
இரண்டு சர்வதேச வரத்தக கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு கப்பல்களும் பனாமா மற்றும் வியட்னாம் நாடுகளுக்கு சொந்தமானவை என குறிப்பிடப்படுகிறது.

கொழும்பு எட்மிரல் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமையவே இந்த கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வரத்தக கப்பல் பணிப்பாளர் ஷாந்த வீரகோன் தெரிவிக்கிறார்.

சிலப் பொருட்களுக்கு பணம் செலுத்தாமை மற்றும் வர்த்தக பிரச்சினை காரணமாக இந்த கப்பல்களை தடுத்து வைக்க நேரி்ட்டதாக வரத்தக கப்பல் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு கப்பல்களும் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment