Tuesday, August 23, 2011

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பாராளுமன்றில் இன்று விவாதம்!

Tuesday, August 23, 2011
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பாராளுமன்றில் இன்று விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் சிரேஸ்ட அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், நீதி அமைச்சர் சல்மான் குர்ஷிட் மற்றும் அரச விவகார அமைச்சர் வீ.நாரயணசாமி ஆகியோர் நாளைய தினம் ஆளும் கட்சியினர் தரப்பில் வெளியிடப்பட வேண்டிய கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து உரையாடப்படவுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கருத்துக்களை வெளியிட சில அரசியல்வாதிகள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி நடைபெற்ற விவாதத்தில் இலங்கை விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர் மக்களின் வாழ்வாதாத்தை மேம்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைத்தல் போன்ற விவகாரங்கள் குறித்து முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment