Thursday, August 25, 2011

ஆராய்ச்சியில் தகவல் புற்றுநோயை தடுக்க குங்குமப் பூ உதவும்!

Thursday, August 25, 2011
வாஷிங்டன் : கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமின் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.

பின்னர், செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டைஎத்தில்நைட்ரோசமைன் (டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப் பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது. இதன் மூலம் குங்குமப் பூ கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர்.

ÔÔஉணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது, கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாக செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறதுÕÕ என அமின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment