Wednesday, August 31, 2011

வவுனியா தனியார் பஸ்ஸில் கைவிடப்பட்ட குழந்தை!

Wednesday,August,31,2011
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் புறப்பட இருந்த தனியார் பஸ்ஸூக்குள் இரண்டு மாத பெண் குழந்தையை கைவிட்டுச் சென்ற தாயை பொலிசார் தேடிவருகின்றனர்.

நேற்று பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், கண்டெடுக்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வைத்தியசாலையில் இவ்வாறு நான்கு குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment