Tuesday, August 30, 2011

ராஜுவ் காந்தி கொலை வழக்கு : 3 பேரை தூக்கிலிட 8 வாரம் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்!.

இதெல்லாம் ஒரு தீர்ப்பா..... ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டும்.....

Tuesday, August 30, 2011
சென்னை : ராஜுவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய 3 பேரை தூக்கிலிட 8 வாரம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சநங்கரநாராயணன் தடை விதித்து உத்தரவிட்டனர். தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி மூவரும் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். மூவரையும் தூக்கிலிட செப்.,9 ந் தேதி நிர்ணயிக்கப் பட்டிருந்தது. உயர்நீதிமன்ற தடையை அடுத்து தூக்கிலிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றத் தடை உத்தரவை வேலூர் சிறை நிர்வாகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி அவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேற்று தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பேரறிவாளன் சார்பில் வக்கீல் தடா சந்திரசேகரன், சாந்தன், முருகன் சார்பில் வக்கீல் வைகை ஆகியோர் நேற்று மனுக்களை தாக்கல் செய்தனர்.

அப்போது நீதிபதி பால் வசந்தகுமார் முன்பு வக்கீல் தடா சந்திரசேகரன் ஆஜராகி, ’’தூக்கு தண்டனை பிரச்சினை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால் அதன் முக்கியத்துவம் கருதி மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, இந்த மனுக்கள் அவசர வழக்காக ஏற்கப்படுவதாகவும், விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்றும் நீதிபதி பால் வசந்தகுமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து வருகிறது. மனுதாரர்கள் சார்பில் டெல்லியை சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, மும்பை மூத்த வக்கீல்கள் மோகீத் சவுத்ரி, காலின் சால்வேல்ஸ் ஆகியோர் ஆஜராகினர். துரைசாமி, சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வைகோ, அற்புதம்மாள் மற்றும் பல தமிழ் ஆர்வலர்களும் ஐகோர்ட்டில் குழுமினர். மனு மீதான விசாரணையில், மூவரின் தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment