Friday, July 15, 2011யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் பெண்ணொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு, எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவற்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 28வயதான சுதாகரன் அகிலா என்ற இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண்ணை படுகொலை செய்தவர் என சந்தேகிக்கப்படும் வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment