Friday, July 15, 2011அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க தேர்தலுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த முடியாது என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது
கால அவகாசம் இன்மையே இதற்கான காரணம் என்று பிரதி தேர்தல் ஆணையாளர் எம் எம் மொஹமட் தெரிவித்துள்ளார்
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேவை என்ற விடயத்தை அரசியல் கட்சிகள் முன்னதாகவே தெரிவித்திருக்கவேண்டும்
இதனை விடுத்து ஒரு கிழமைக்கு முன்னர் அந்த கோரிக்கையை முன்வைப்பதை யதார்தமற்றது என்றும் மொஹமட் கூறினார்
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர் தேவை என்று அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து கோரிக்கையை விடுத்திருந்தமை குறி;ப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment