Thursday, July 21, 2011

களுவாஞ்சிக்குடியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

Thursday, July 21, 2011
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட செட்டிப்பாளையம் கிராமத்தில் தூக்கில் தொங்கியநிலையில் தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

செட்டிப்பாளையம் பாடசாலைவீதியில் இன்று காலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment