Monday, September 2, 2013

கச்சத்தீவு பிரச்சினை: மத்திய அரசுக்கு (23ம் புலிகேசி) கருணாநிதி கண்டனம்!

Monday, September 02, 2013
சென்னை::கச்சத்தீவு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தவராறான தகவல்களை பிரமாண வாக்கு பத்திரத்தின் மூலம் கூறியுள்ளது என தி.மு.க. தலைவர் (23ம் புலிகேசி)கருணாநிதி மத்திய காங்கிரஸ் அரசு மீது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கச்சத்தீவு பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கச்சத்தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத்தொடர்ந்து இந்திய- இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக்கோட்டை நிர்ணயித்தபோது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்றுவிட்டது.
அதன் பிறகு 1974-ம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 1976-ம்ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. 
 
கச்சத்தீவு இந்தியாவிற்குத்தான் சொந்தம் என்றும், அதனை 1974-ம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாக தாரை வார்த்துவிட்டது என்றும், அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக்கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368-வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை அப்படி எந்த வொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை.
 
மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் டெல்லிக்குவந்த இலங்கை அமைச்சர் பெரீஸ், கச்சத்தீவு முடிந்து போன அத்தியாயம் என்று வரம்பு கடந்து பேசியதற்கு மத்திய அரசு பின்பாட்டு பாடுவதைப்போல, இந்தப் பிரமாண வாக்குமூலத்தை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
கச்சத்தீவு, இராமநாதபுரம் சேதுபதி அரசருக்குச் சொந்தமானது. இந்தத் தீவை வணிகர்களான ஜனாப் முகமது காதர் மரக்காயருக்கும், முத்துசாமி பிள்ளைக்கும் அரசர் சேதுபதி ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தார். இதற்கான ஆவணம், இராமநாதபுரம், துணை பதிவாளர் அலுவலக ஆவண எண். 510டி570, தேதி 2.7.1980. 1947இல் ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சொந்தமானது. கச்சத் தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன.
 
கச்சத்தீவுப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நீதியும் நேர்மையும் நிரம்ப இருப்பதால், நமது உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டிடும் என்று நம்புவோம்!இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Sunday, September 1, 2013

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாதவாறு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

Sunday, September 01, 2013
இலங்கை::மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாதவாறு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசியல் கட்சிகளை தெளிவுபடுத்த தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அரசியல் கட்சி செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கூறியுள்ளார்.
 
மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகளால் பல்வேறு பகுதிகளில் மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியமை தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இந்த நிலையில் எதிர்காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் செயலகம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது

சிரியா இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது என்பது அபத்தமானது: ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின்!

Sunday, September 01, 2013
விளாடிவோஸ்டாக்::சிரியாவில் அதிபர் ஆசாத் படை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி பொதுமக்கள் 1400 பேரை கொன்றது என்று ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இதனையடுத்து அமெரிக்கா, சிரியாவின் மீது போர் தொடுக்க செனட்
சபையின் ஒப்புதலுக்காக அதிபர் ஒபாமா காத்திருக்கிறார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் கூறியதாவது:-

சிரியா இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறது, அதை பொதுமக்கள் மீது பயன்படுத்தியிருக்கிறது என்பதற்கு அமெரிக்கா ஆதாரங்கள் வைத்திருந்தால் அதை ஐ.நா. ஆய்வாளர்களிடமு, ஐ.நா. பாதுகாப்பு சபையிடமும் சமர்பிக்க வேண்டும்.

என்னை பொருத்தவரை, சிரியா பிரச்சினையில் மற்ற நாடுகளை உட்படுத்த நினைப்பவர்களின் எரிச்சலேயன்றி இது வேறொன்றுமில்லை. இதன்மூலம் உலகில் சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவை பெறுவது யார் என்பதை காட்டுவதுமுமே ஆகும். 

சிரியா பொதுமக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி நோபல் பரிசு பெறுவோரின் பட்டியலில் ஒபாமாவும் இடம்பெறவேண்டும். அடுத்த வாரம் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சிரியா பிரச்சினை குறித்து விவாதிப்பதே நல்லது.

எனவே சிரியா மீது ஒபாமா, தாக்குதல் நடத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிரியாவிடம் இராசயன ஆயுதங்கள் இருப்பது என்பது முற்றிலும் அபத்தமானது.

இவ்வாறு புதின் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif

நவநீதம்பிள்ளை தமது விஜயத்தை நிறைவு செய்து இன்று அதிகாலை 12.25 மணியளவில் நாடு திரும்பினார்!

Sunday, September 01, 2013
இலங்கை::இலங்கை 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தமது விஜயத்தை நிறைவு செய்து இன்று அதிகாலை 12.25 மணியளவில் இலங்கைக்கு சொந்தமான யுஎல்553 என்ற விசேட விமானம் மூலம் பிரேங்போட் நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்துள்ளார்.

ஐ.நா. ஆணையாளர் இவ் விஜயத்தின் போது ஜனாதிபதி, அமைச்சர்கள் சிலர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து இருந்ததோடு வடக்கு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கும் விஜயத்தை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை எதிர்வரும் காலங்களில் கூடுதல் பங்களிப்பு வழங்கும்: இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க!

Sunday, September 01, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை எதிர்வரும் காலங்களில் கூடுதல் பங்களிப்பு வழங்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். 5000 படையினரை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
தொழில்சார் இராணுவம் என்ற ரீதியில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவம் கூடுதல் பங்களிப்பு வழங்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிகளவான படையினரை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையைச் சேர்ந்த 900 படையினர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்கத்கது. ஹெய்ட்டி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் அமைதி காக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது எவ்வாறு என்ற மிகப் பெரிய பாடத்தை இலங்கை இராணுவம் உலகிற்கு உணர்த்தியுள்ளதாகத் தெரிவித்தள்ளார். மூன்று தசாப்தமாக நீடித்த யுத்தத்தை இல்லாதொழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த உலக அளவில் இலங்கை இராணுவம் சரித்திரம் படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

புலிகள் போன்ற இரக்கமற்ற அமைப்புக்க ளுக்கு மரியாதை இருக்கும் என்று புலம்பெயர் தமிழர்கள் எதிர்பார்க்க முடியாது: ஐ. நா. மனித உரிமை கள் ஆணையாளர் நவநீ தம்பிள்ளை!

Sunday, September 01, 2013
இலங்கை::ஐ. நா. மனித உரிமை ஆணையம் போன்ற மகி மைமிக்க உயர் நிறுவனத் திடம் புலிகள் போன்ற இரக்கமற்ற அமைப்புக்க ளுக்கு மரியாதை இருக்கும் என்று புலம்பெயர் தமிழர் கள் எதிர்பார்க்க முடியாது என ஐ. நா. மனித உரிமை கள் ஆணையாளர் நவநீ தம்பிள்ளை தெரிவித் துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நவநீதம்பிள்ளை நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு விஜயம் செய்ய விடுக்கப்பட்ட அழைப்புக்கும் தந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறிய நவி பிள்ளை, ஒரு நாட்டில் நீண்ட நாள் பயணமாக சென்றமையும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இலங்கையில் தான் எட்டு வெவ்வேறுபட்ட தரப்பினை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
கோரிக்கை விடுத்த அனைவரையும் சந்திக்க முடியாது போனமைக்கு வருந்துகிறேன். இலங்கை விஜயம் குறித்து செப்டெம்பரின் இடைக்கால அறிக்கையையும் மார்ச் மாதத்தில் முழு அறிக்கையும் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.
 
இந்திய பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் நான் என்பதால் விடுதலைப் புலிகளின் சார்பு கருவி என சில ஊடகங்கள் விவரித்தன. அவர்களால் காசு கொடுக்கப்பட்டவள் நான் எனவும் தமிழ் பெண் புலி எனவும் கூறினர். அது தவறானது.
 
மிக ஆழமான தாக்குதல் ஆகும்.ஆனால் நான் ஒரு தென்னாபிரிக்கர். அதனையிட்டு பெருமிதம் அடைகிறேன் என்பதை முதலில் கூற வேண்டும். பல உயிர்களை கொன்றழித்த இரக்கமற்ற அமைப்பே புலிகள் அமைப்பாகும்.
நீலன் திருச்செல்வத்தையும் அவர்கள் கொலை செய்தனர். இப்படியான இரக்கமற்ற அமைப்புக்கு மகிமைமிக்க அமைப்பில் மரியாதை இடமுண்டென புலிகளிடம் பணம் பெற்று வரும் புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்பார்க்க முடியாது.
 
30 வருட யுத்தத்தில் உயிர் பலிகொடுத்த அனைத்து இலங்கையர்களையும் நான் மதிக்கிறேன். அவர்களுடைய குடும்பங்களுக்கு நான் அனுதாபத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அந்த இழப்பை அவர்களால் ஈடுசெய்துகொள்ள முடியாது. மோதல் முடிவடைந்தும் துன்பம் தீரவில்லை.
வடக்கு தேர்தல் அறிக்கை நான் வரவேற்கிறேன். அமைதியான நீதியான சூழலில் தேர்தல் நடக்கும் என நான் நம்புகிறேன். அதிகார பகிர்வுக்கு அது புதிய கட்டமாக அமையும்.
 
ஒரே இரவில் இராணுவத்தை குறைத்துவிட முடியாது என்ற பாதுகாப்பு செயலரின் கருத்தை நான் ஏற்கிறேன்.
இவ்வாறு நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.