Tuesday, August 20, 2019

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்!

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று  (19) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
1984 ஆம் ஆண்டு கெடட் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட சவேந்திரசில்வா இராணுவ படைகளின் பிரதானியாகவும் கடைமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment