Tuesday, May 28, 2019

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரே எமக்கு தகவல் வழங்கினார்கள்!

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரே எமக்கு தகவல் வழங்கினார்கள்..
இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரே எமக்கு தகவல் வழங்கினார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தினார்.
தாங்கள் முதலில் கிரிஸ்தவ அடிப்படை வாதத்திற்கு எதிராகவே நாம் முதலில் பேசிவந்தோம் அப்போது இந்த நாட்டிற்கு மீது அன்பு செலுத்தும் முஸ்லிம்கள் எம்மை சந்தித்து பல்வேறு தகவல்களை வழங்கினார்கள்.அவர்கள் இதனை வெளிப்படுத்தினால் அவர்களின்
உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அவர்கள் கூறினார்கள் என கூறினார்.
இலங்கையில் வஹாபிசம் இருப்பதாக நாம் கூற முன்னர் அலவி மௌலானா மற்றும் அஸாத் சாலியின் சகோதரர் ரியாஸ் சாலி ஆகியோர் தகவல் வெளியிட்டார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment