Saturday, November 10, 2018

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். பிரதமர் செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், அரச துறையில், குறிப்பாக மருத்துவத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்த ஆராயப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தை மீளப் பெற்றுக்கொடுத்தல், அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு கொள்கை ஒன்றை தயாரித்தல் மற்றும் தேசிய வேதனக் கொள்கையை பாதுகாக்கும் அடிப்படை வேதன முறைமையை ஏற்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment: