Sunday, October 28, 2018

நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு!

நாடாளுமன்றில் தேவையான அளவிற்கு அதிகமான பெரும்பான்மை ஆதரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது கட்சியினால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றவதற்கு முன்னாள் பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால்இ அவருக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

மாத்தறையில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது, அதன் அரசியற் குழு உறுப்பினர் லால் காந்த இந்தக் இதனைத் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள அதிகாரங்களின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தை நாடி தற்போது ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு ரீதியான நெருக்கடி நிலைமை தீர்க்குமாறு ரணில் விக்கரமசிங்க கோரலாம்.

அல்லது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை அவர் நிரூபிக்க வேண்டும் என லால் காந்த தெ
ரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment