Monday, May 1, 2017

வட கொரிய பிரச்னை:பேரழிவைத் தவிர்க்க போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்!

வட கொரிய பிரச்னையால் அணு ஆயுதத்தால் ஏற்படக்கூடிய பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.கெய்ரோவிலிருந்து தனது விமானத்தில் பயணம் செய்யும் போது போப் பிரான்சிஸ் வட கொரிய சிக்கலைத் தீர்க்க மூன்றாம் தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றார்.
 
ஆயுத போர் சிக்கல்

வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மூன்றாம் தரப்பு நாடு ஒன்று குறிப்பாக நார்வே போன்றதொரு நாடு மத்தயஸ்தப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தற்போதைய சூழ்நிலை மிகவும் சூடாகி விட்டது, உலகம் ஒரு அழிவு தரும் அணு ஆயுத போர்ச் சிக்கலை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.அப்படியொரு பரவலானப் போர் வரும் பட்சத்தில் மானுடத்தின் சிறப்பானதொரு பகுதி அழியக்கூடும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment