Friday, February 24, 2017

சீனாவின் உயர் மட்டக் குழுவினர், மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு!

இலங்கைக்கு விஜயம் செவய்துள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
 
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரான, சொங் டாவோ தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பில் வைத்து மஹிந்தவை சந்தித்துள்ளனர்.
 
இந்தச் சந்திப்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, மகிந்தானந்த அழுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல, நாமல் ராஜபக்ஸ மற்றம் முன்னாள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
தமது ஆட்சிக் காலத்தின்போது சீனாவுடன் மிகவும் நெருங்கிய உறவைப் பேணிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தற்போதைய அரசாங்கம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனாவுக்கு வழங்குவதற்கும், முதலீட்டு வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கும் மஹிந்த ராஜபக்ஸ கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.
 
இதேவேளை, சீன உயர்மட்ட குழுவினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment