Saturday, January 28, 2017

எதற்காக ஆட்சியைப் பெற்றோம் என்பதை அறியாத இந்த ஆட்சியாளர்கள் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே நாம் கடன் பெற்றோம். அதன் பிரதிபலன்களை பொதுமக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்த அரசாங்கம் பெற்ற கடனால் என்ன செய்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினா எழுப்பினார்.
 
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற புரட்சியின் ஆரம்பம் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
மோசடியான அரசியலமைப்பு ஒன்றை தயாரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. அதற்கு எதிராக செயற்பட வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.
 
தற்போது நாடு பாரிய கடன் சுமையுடன் காணப்படுகின்றது.  அதற்காக தன்னை இந்த அரசாங்கம் குற்றம்சாட்டி வருகின்றது.
 
இந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் எதற்காக ஆட்சியைப் பொறுப்பேற்றோம் என்பதை அறியாதுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment