Sunday, January 29, 2017

ரஷ்ய யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 2 பொலிஸார் கைது!

கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுக்கான  பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று (29) இவர்கள் கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment