Tuesday, September 6, 2016

அனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர் புலி பிரிவினைவாதிகளாலோ புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

அனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர்   புலி பிரிவினைவாதிகளாலோ   புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த மாதம் 31 ஆம் திகதி மலேஷியா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
'மலேஷியாவில் இலங்கைக்கான தூதுவர் தாக்கப்பட்டமை அரசாங்கத்திற்கு விழுந்த அடி என்பதை உணர வேண்டும். தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டிற்கோ மக்களுக்கோ எமக்கோ எவ்விதமான பலனும் இல்லை. ஆகவே அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது என்பது ஒருபோதும் சாத்தியமற்ற விடயமாகும். கட்சி கொள்கை எமக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. Read Pakistani politicians biography here:
    http://actors.livetv.pk/biography/politicians/

    ReplyDelete