Sunday, August 14, 2016

கொழும்பு யாழ். செல்லும் ரயில்களுக்கு ஆயுதப் பாதுகாப்பு!

யாழ். - கொழும்பு இடையே பயணிக்கும் ரயில்கள் மீது தொடர்ந்து கல்லெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையடுத்து ரயில்களில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து நேற்றுஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
அண்மையில் வவுனியாவை நோக்கிச் சென்ற ரயில் ஒன்றின் மீது ஒருகொடவத்தையில் வைத்து நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலின்போது அநுராதபுரத்தை சேர்ந்த கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
 
இதனையடுத்து தூரச்செல்லும் ரயைில்களுக்கு ஆயுதங்களுடன் கூடிய பாதுகாவலர்களின்பாதுகாப்பு நேற்று முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment