Sunday, February 14, 2016

ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத தினேஸ் குணவர்த்தனவுக்கு கூட்டு எதிரணியின் தலைவர் பதவி!

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஆரம்பிக்க உள்ள புதிய கட்சியின் தலைவர் பதவிக்கு நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, கோத்தபாய ராஜபக்ஸ, மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 
பெரும்பாலானவர்கள் மகிந்த ராஜபக்ஸவின் பெயரை பரிந்துரைத்துள்ளதுடன் மேலும் சிலர் இடதுசாரி கொள்கைகளை கொண்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்காத தினேஷ் குணவர்தனவே தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் எனக் கூறியுள்ளனர். அடுத்து வரும் சில தினங்களில் இந்த புதிய கட்சி ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி என்று அந்த கட்சிக்கு பெயரிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment