Sunday, February 14, 2016

நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் 92 பேர் கொலை! டிலான்!

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று வரை 92 பேர் கொலை செய்யப்பட்டுள்ளர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி என்ற போர்வையில் ஆட்சியை ஏற்றவர்கள் அதில் பல திட்டங்களை இன்றுவரை நிறைவேற்றவில்லை. மாறாக இதுவரைக்கும் அவர்கள் ஆட்சி ஏற்ற நாளில் இருந்து இன்றுவரை 92 கொலைகளை தான் செய்துள்ளார்கள் என்று அங்கு குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி என்பது வெறும் மாயை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

ஐ.தே.க சடலங்களை தோண்டியெடுத்து அதிக வாக்குகளை பெற முயற்சிக்கிறது: டிலான்

1 comment: