Tuesday, October 20, 2015

கனடா தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது!

கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், கடந்த 9 ஆண்டுகளாக ஆண்டு வந்த, கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பிரதமராக ஜஸ்டின் ட்ரூடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
கனடா நாடாளுமன்றத்தின் 338 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பல முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் படுதோல்வியை சந்தித்தனர். 181 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது
 
லிபரல் கட்சி. கனடாவில் ஆட்சி அமைக்க மொத்தம் 170 இடங்கள் தேவை. தற்போது பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி அக்கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ருடா (43) புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் பியரே ட்ருடாவின் மகன் ஆவார்.
கனடாவின் புதிய பிரதமராகும் ஜஸ்டின் ட்ருடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் லிபரல் கட்சி சார்பாக ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி என்ற ஈழத்தமிழர் வெற்றி பெற்றுள்ளார். இது தவிர இந்திய-கனடியர்களான 19 பேரும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. it is nice blog and some history of anceant era this also based upon vedulas and some anlised the what type of uses hear and to enlorged the wiki www.acebazaar.com

    ReplyDelete