Wednesday, September 16, 2015

பிரதமர் ரணில், ப்ரணாப் முகர்ஜி இன்று சந்திப்பு!

Wednesday, September 16, 2015
மூன்று நாள் இந்திய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் குடியரசு தலைவர் ப்ரணாப் முகர்ஜியை சந்திக்கவுள்ளார்.

இதன் போது இருதரப்பு உறவுகள் குறித்த ஆராயப்படும் என பிரதமரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

புதுடெல்லி சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அத்துடன் நேற்று மாலை, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்திய கோங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, சோனியா காந்தி உள்ளிட்டவர்களை இலங்கைக்கு வருமாறும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

No comments:

Post a Comment