Saturday, September 12, 2015

விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சி ?

Saturday, September 12, 2015
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு கூட்டமைப்பினர் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படாததுடன், கூட்டமைப்பின் கருத்துக்களுடன் பல இடங்களில் முரண்பட்டிருந்தார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தான் நடுநிலையாகச் செயற்படப்போவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
 
இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் அண்மையில் கூடி இது தொடர்பில் ஆராய்ந்திருப்பதாகத் தெரியவருகிறது
 

No comments:

Post a Comment