Tuesday, September 8, 2015

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தமது பதவிகளை பொறுப்பேற்றனர்!

Tuesday, September 08, 2015
புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று தமது அமைச்சுகளின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

இதன்படி, பௌத்த சாசன மற்றும் நீதியமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஸ, இன்று தமது நீதியமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார்.

தொழிலமைச்சராக நியமிக்கப்பட்;ட டபிள்யூ. டி ஜே செனவிரத்ன தமது அமைச்சின் கடமைகளை, நாரேஹன்பிட்டியில் உள்ள காரியாலயத்தில் பொறுப்போற்றார்.

கனியவள மற்றும் கனியவாயு அமைச்சராக ஷந்திம வீரகொடி இன்று, கொழும்பு 7 இல் அமைந்துள்ள அமைச்சில் தமது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இதேவேளை, மீன்பிடிதுறை மற்றும் நீரியல்துறை அமைச்சராக பொறுப்போற்ற மகிந்த அமரவீர, மீன்பிடித்துறையின் தொழிநுட்பத்தை மேம்படுத்த உள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், பாட்டளி ஷம்பிக்க ரணவக்க, துமிந்த திஸாநாயக்க மற்றும் மனோ கணேஷன் ஆகியோரும் தமது அமைச்சு பொறுப்புகளை இன்று ஏற்றனர்.

No comments:

Post a Comment