Saturday, September 5, 2015

ராஜாபக்ச, ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்துடனேயே மத்தல சர்வதேச விமானநிலையத்தில் நெற்களஞ்சியம்: நாமல் ராஜாபக்ச!

Saturday, September 05, 2015
மத்தல சர்வதேச விமானநிலையத்தில் புதிய அரசாங்கம் நெல்லை களஞ்சியப்படுத்த தீர்மானித்துள்ளதை கடுமையாக சாடியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜாபக்ச, ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்துடனேயே இந்த செயல் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் மிகவும் வெற்றிகரமான முயற்சிகளில் ஒன்று மத்தலை சர்வதேச விமானநிலையம்,

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் தேவை கருதி நவீன தொழில்நுட்பங்களுடன் விமானநிலையம் உருவாக்கப்பட்டது. குறிப்பிட்ட  திட்டங்கள் நீண்ட  கால அளவிலேயே பயனை அளிக்ககூடியவை, உடனடியாக பலன்களை எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment