Saturday, September 26, 2015

அமெரிக்க தீர்மானத்தின் ஊடாக மறைமுகமாக கலப்பு நீதிமன்றம் வலியுறுத்தப்பட்டுள்ளது: தயான் ஜயதிலக்க!

Saturday, September 26, 2015
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச தீர்மானத்தில் மறைமுகமாக கலப்பு நீதிமன்ற விசாரணை வலியுறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டதாக தென்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதவான்கள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை நீதிமன்ற பொறிமுறைமையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இரண்டாம் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
எனினும், இந்த பரிந்துரையானது இலங்கையின் உள்ளக நீதிமன்ற பொறிமுறையாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையில் முறைமையானது மறைமுகமான கலப்பு நீதிமன்றம் எனவும், குவாசி காலணித்துவ முறைமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் பின்னர் இலங்கையில் வெளிநாட்டு உள்நாட்டு நீதவான்களின் கூட்டில் விசாரணைகள் நடத்தப்பட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே உத்தேச தீர்மானம் இலங்கையை காலணித்துவ ஆட்சி நோக்கி நகர்த்துவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கம் நாட்டுக்கு விரோதமாக செயற்படுகின்றமை அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment