Saturday, September 5, 2015

இன்று கிருஷ்ண ஜெயந்தி!

Saturday, September 05, 2015
சென்னை:குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய ஸ்தோத்திரம் நாராயணீயம். இதை கிருஷ்ண
ஜெயந்தியான இன்று படிப்பதன் மூலம் நினைத்தது நடக்கும்.
 
* மஹா விஷ்ணுவே! கிருஷ்ணா! வேதங்களால் போற்றப்படுபவனே! ஆனந்த வடிவானவனே! கோபியரின் மனத்தில் இருப்பவனே! என் துன்பம் நீங்க வணங்குகிறேன்.
* மும்மூர்த்திகளில் சிறந்தவனே! சர்வேஸ்வரனே! கருமை நிறக் கண்ணா! மந்திர சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பவன் நீயே என்று கூறப்பட்டுள்ளது. உன்னை ஆதிசங்கரரும் போற்றி வணங்கிஉள்ளார். அந்த திருப்பாதங்களைப் போற்றுகிறேன்.
* தேவாதி தேவனே! அனைவருக்கும் உயிராக விளங்கும் கிருஷ்ணனே! உண்மையில்லாதவற்றில் ஆசை கொண்டு துன்பம் அடையும் மனிதன், உன்னை வணங்கினால் எல்லா இன்பமும் அடைவான். அவ்வாறு அருள் செய்ய வேண்டுமென உன்னை வணங்குகிறேன்.
* எங்கும் நிறைந்த பரம்பொருளே! உடல், மனம், மொழியால் இந்த பூமியில் எதையெல்லாம்
செய்கிறேனோ அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். உன் திருவடியில் சரணடைகிறேன்.
* உன்னிடம் சரணடைந்தவர்கள் எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவர். தேவாதி தேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் கிடைக்கட்டும். அவர்களுடைய நல்ல வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.
* ஜகந்நாதப் பெருமாளே! ஹரியே! பஞ்சபூதம், பிர பஞ்சம், பறவை, மீன், விலங்கு, தாவரம் என எல்லாவற்றையும், நண்பர், எதிரியையும் கூட, உன்னுடைய வடிவமாகவே கண்டு மகிழ்கிறேன்.
இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் வாய்க்கும் பேறு பெற்றேன்.
* பெருமானே! உன்னிடத்தில் மனம் ஒன்றி விட்டதால், வழக்கமான பசி, தாகம் மறந்து விட்டது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனதில் சிறிதும் தளர்ச்சி இப்போது இல்லை. உன் அருளால், மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன்.
* பெருமாளே! கலியுகத்தில் உன் பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலும் கூட போதும்! உன் அருளைப் பெற்று விடலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் எல்லாரும் இந்த யுகத்தில் பிறக்க ஆசைப்படுகின்றனர். பாக்கிய வசத்தால் இந்த கலியுகத்தில் பிறந்த என்னை ஏற்றுக் கொள்வாய்!
* வாசுதேவா புருஷோத்தமா! கங்கையில் நீராடுதல், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக்கிராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளுக்கு வழிவகுக்கும். இந்த எட்டு வழிகளிலும் என்னை ஈடுபடுத்தி நல்லருள் புரிய வேண்டும்.

No comments:

Post a Comment