Friday, September 18, 2015

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பரிந்துரைகளை ஏற்குமாறு த.தே.(புலி)கூ அரசாங்கத்திடம் கோரிக்கை!

Friday, September 18, 2015
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை தமிழ்த்தேசியக் .(புலி)கூட்டமைப்பு கோரியுள்ளது

மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹ_சைன் இந்த அறிக்கையை வெளியிட்டு சிறப்பு கலப்பு நீதிமன்றத்துக்கான பரிந்துரையை முன்வைத்திருந்தார்

போர்க்குற்ற அறிக்கையில் அரசாங்கப்படையினர் மற்றும் புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இந்த நீதிமன்றத்தின்கீழ் விசாரணை செய்ய சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்வாங்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்

அதேநேரம், இந்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு இலங்கையின்  நீதிக்கட்டமைப்பு தயார்நிலையில் இல்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்தேசியக் .(புலி)கூட்மைப்பு, குறித்த அறிக்கையை வரவேற்றுள்ளது.

அத்துடன் அரசாங்கம் மற்றும் ஏனைய தரப்புக்கள் அனைத்தும் இந்தப்பரிந்துரைகளை ஏற்றுச்செயற்படவேண்டும் என்றும் இந்தவிடயத்தில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இதற்கிடையில் தமிழ் தேசிய மக்கள் .(புலி)முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னப்பலம்.  யாழ்ப்பாணத்தில் இது தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

இதன்போது அறிக்கையின் பரிந்துரைகளையும் சிறப்பு நீதிமன்ற யோசனையையும் அவர் வரவேற்றார்

எனினும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் (புலிகளுக்கு) ஆதரவு
சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டை தொடரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு நீதித்துறை விசாரணைகளை மேற்கொள்வதற்கு தயாரில்லை என்ற அடிப்படையிலேயே உள்நாட்டு விசாரணைகளை மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார்.

எனினும் கலப்பு நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதிகளுடன் உள்நாட்டு நீதிபதிகளும் இணைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

எனவே இது உறுதிப்படுத்தப்படும்வரை தமிழ்மக்கள் சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கவேண்டும் என்று கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகளுடனான கலப்பு நீதிமன்றத்துக்கான யோசனைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் பூரண ஆதரவு அளிக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

நீண்டகாலமாக இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், இந்த கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக நியாயம் கிடைக்கும் சிறந்த வழியாக அமையும் என்று, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா பணிப்பாளர் ஜோன் பிஷர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தின் அடிப்படையில், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment