Tuesday, September 1, 2015

நெடுந்தீவுக் கடற்பரப்பில் 16 இந்திய மீனவர்கள் கைது!

Tuesday, September 01, 2015
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் வந்த 3 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். 
 
நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாயக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து 
வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment