Monday, September 28, 2015

இலங்கை மற்றும் இந்திய படையினர் இணைந்து 14 நாட்களுக்கான கூட்டுப் பயிற்சி!

Monday, September 28, 2015
இலங்கை மற்றும் இந்திய படையினர் இணைந்து 14 நாட்களுக்கான கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியாவின் பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தீவிரவாத ஒழிப்பு தொடர்பான இந்த பயிற்சிகள் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ தொடர்புகளை விரிவுப் படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூனேயில் எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த பயிற்சிகளுக்கு மித்ரசக்தி பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment