Monday, August 24, 2015

கோட்டாபய விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்திருந்த அழைப்பிற்கு அமைய அவர், இன்று விசாரணைகளுக்காக ஆஜராகியுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான அறிக்கையை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் இன்று காலை 9.30 மணியளவில் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணையுடன் தொடர்புடைய ஏனைய அனைத்து தரப்பினரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment