Sunday, August 30, 2015

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, தங்களுக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் : தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு!

Sunday, August 30, 2015
நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய, தங்களுக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் அதிகபடியான ஆசனங்களைப் பெற்ற இரண்டு கட்சிகள் கூட்டிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கின்றன.

தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒரு அங்கம் ஆதலால், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் எதிர்கட்சியாக செயற்பட முடியது.

இவற்று அடுத்தபடியாக, இலங்கை தமிழரசு கட்சியே நாடாளுமன்றத்தில் அதகபடியாக 16 ஆசனங்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின்படி இலங்கை தமிழரசு கட்சியின் குழுத் தலைவர் என்ற அடிப்படையில், இரா.சம்பந்தனுக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் அனைத்தின மக்களுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில், இந்த விடயத்திலும் அந்த உறுதிமொழி நடைமு


றைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி நாடாளுமன்றம் ஒன்று கூடும் போது, எதிர்கட்சித் தலைவர் யாரென்று அறிவிக்கப்பட வேண்டும்.

எனினும் இது குறித்து இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த தினம் ஜனாதிபதியின் தலைமையில் ஒன்று கூடிய சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டிருந்தது.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற சிறிய கட்சிகள் எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றன.

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் எதிர்கட்சித் தலைவரை தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதேநேரம் எதிர்கட்சித் தலைவர் பதவி என்பது நாடாளுமன்றத்தின் விவகாரம் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ்குணவர்தன கூறியுள்ளார்.

அதற்கு முன்னதாக அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யார் எதிர்கட்சித் தலைவராக இருந்தாலும், எதிர்கட்சிக்கான பொறுப்புக்கள் தங்களுக்கு இருப்பதாக ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment