Sunday, August 30, 2015

மங்களவிற்கு ஜனாதிபதி டோஸ் விட்டார்!! – அவருக்குத் தெரியாமல் பத்திரிகையாளர் மாநாடு நடத்தினாராம்!!

Sunday, August 30, 2015
அமெரிக்காவிற்கான தெற்காசிய உதவி செயலாளர் நிஷா பிஸ்வால், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். அதன்பின் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.
 
ஆனால் நாட்டின் ஜனாதிபதியை சந்திக்குமுன் ஊடக சந்திப்பை நடாத்தியது இராஜதந்திர முறைகளுக்கு முரணான செயல் என்பதை முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பாக மங்கள சமரவீரவிற்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment