Sunday, August 30, 2015

முகுல் - இளங்கோவன் - குஷ்பு: தமிழக காங்கிரசில் தனி கூட்டணி!

Sunday, August 30, 2015
சென்னை:இளங்கோவன் பேச்சால் எழுந்த திடீர் சர்ச்சைக்கு பின், தமிழக காங்கிரஸ் கட்சியில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்லக்குமார், வசந்தகுமார் என, எல்லா கோஷ்டி தலைவர்களும், ஒன்று சேர்ந்துள்ளனர்.
 
அபாயம்:இதில், சிதம்பரம் தவிர்த்து, மற்ற தலைவர்கள் எல்லாம், டில்லி சென்று, மேலிட தலைவர்கள் மோதிலால் ஓரா, அகமது படேல் ஆகியோரை சந்தித்து, இளங்கோவனுக்கு எதிராக, முறையிட்டுள்ளனர். 'இளங்கோவன் பேச்சால், தமிழக காங்கிரஸ் அறக்
 
கட்டளை கைவிட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என, புகார் தெரிவித்து, திரும்பிஉள்ளனர்.
 
சவால்:சிதம்பரம், தன் பங்குக்கு டில்லி தலைவர்களிடம், இளங்கோவனை மாற்றும்படி கோரியுள்ளார். 'அவரது தலைமையில், தேர்தலை சந்திப்பது என்பது, கட்சிக்கு பெரிய
 
சவாலாக இருக்கும்' என்றும் எச்சரித்துள்ளார்.இந்த சூழலில், இளங்கோவனுக்கு ஆதரவு கொடி பிடிப்பவர், நடிகை குஷ்பு மட்டுமே. கட்சியின் மேலிட செய்தி தொடர்பாளராக இருக்கும், நடிகை குஷ்புவும், மேலிட பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலருமான முகுல் வாஸ்னிக்கும்,
 
இளங்கோவனை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். இதனால், தமிழக காங்கிரசில், தனி கூட்டணி உருவாகி உள்ளதாக, கூறும்,
 
தமிழக காங்கிரசார், அதற்கு ஒரு உதாரணத்தையும் கூறினர்.
அ.தி.மு.க.,வினரின் எதிர்ப்புக்கு காரணமான இளங்கோவன், டில்லி சென்றார். காங்கிரஸ் சொத்து விவகாரம் தொடர்பாக, இளங்கோவனை அழைத்து, மேலிட பொறுப்பாளர் மோதிலால் ஓரா பேச விரும்பினார். உடனே, அதில் குஷ்புவும் கலந்து கொள்ள வேண்டும் என, முகுல் வாஸ்னிக் கண்டிப்பாக கூறி விட்டார்.
 
ஆலோசனை:அதையடுத்து, குஷ்பு அவசரமாக டில்லி வந்தார். முகுல் வாஸ்னிக், இளங்கோவன், குஷ்பு ஆகிய, மூவர் மட்டும் கலந்து கொண்ட கூட்டத்தை கூட்டி, ஓரா ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த மற்ற கோஷ்டி தலைவர்கள் எல்லாம், இப்போது ஒன்று சேர்ந்துஉள்ளனர். அவர்களில், திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி,
 
செல்லக்குமார், வசந்தகுமார் உள்ளிட்டோர், டில்லி சென்று ஓரா, அகமது படேல் ஆகியோரை சந்தித்துள்ளனர்.'இளங்கோவன் பேச்சினாலும், 'டிரஸ்ட்' முறைகேடு கள் அம்பலத்துக்கு வந்துள்ளதாலும், தொடர்ந்து அறக்கட்டளையை தக்கவைப்பது கடினமாகி விட்டது' என, அவர்கள் புகார் தெரிவித்துஉள்ளனர்.- நமது

No comments:

Post a Comment