Thursday, August 27, 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான பயணத் தடை நீக்கம்!

Thursday, August 27, 2015
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிரான பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. கோதபாய ராஜபக்ஸ,வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அவனட் க்ரேட் பாதுகாப்பு நிறுவனம் தொடர்பிலான சர்ச்சையைத் தொடர்ந்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்சியம் தொடர்பிலான சர்ச்சையை தொடர்ந்து வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள கோதபாயவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை இன்றைய தினம் காலி நீதவான் நீக்கியுள்ளார்.

No comments:

Post a Comment