Thursday, August 13, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதிமன்றில் நாளை!

Thursday, August 13, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதிமன்றில் நாளை வெள்ளிக்கிழமை விசாரணை செய்யப்படைவுள்ளது.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்து அரசாங்கத்திற்கு பாரியளவில் நிதி நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
சட்டத்தரணி கெலும் குமாரசிங்க என்பவரினால் நேற்று இந்த மனு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இந்த மனுவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
 
கிரேக்க பிணை முறி முதலீடு மற்றும் ஊழியர் சேமலாப நிதி முதலீடு என்பனவற்றின் ஊடாக ஆயிரக்கணக்கான கோடி ரூபா பணம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது

No comments:

Post a Comment