Sunday, August 23, 2015

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பான இறுதி தீர்மானம் இல்லை!

Sunday, August 23, 2015
தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளும் கூட்டம் இன்றும் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் திருகோணமலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் இறுதி தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கூட்டமைப்பின் தேசிய பட்டியலில், பேராசிரியர் சீ.கே.சிற்றம்பலம், பேராசிரியர் நாச்சியார் செல்வநாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சோலமன் சூ சிறில், வடமாகாண சபை உறுப்பினர் மேரி கமலா குணசீலன், மயில்வாகனம் தேவராஜன், கணகநமநாதன், அந்தோனிப்பிள்ளை மேரியம்மா, அருணாசலம் குணபாலசிங்கம் எஸ்.எஸ்.குலநாயகம் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்களைப் கைப்பற்றி,இரண்டு மேலதிக ஆசனங்களைப் பெற்றது.

மேலதிக ஆசனங்களுக்காக, தோல்வி அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோரின் பெயர்களை உள்ளடக்குமாறு கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பெண்களுக்கு இந்த ஆசனங்களை வழங்குமாறும், அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே இன்னும் இது குறித்து தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.

No comments:

Post a Comment