Friday, August 14, 2015

ஶ்ரீலசு கட்சியில் இருந்து சந்திரிக்கா குமாரதுங்க நீக்கப்பட வேண்டும்: பண்டார தென்னக்கோன்!

Friday, August 14, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நீக்கப்பட வேண்டும் என்று மாத்தளை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனக பண்டார தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியை வெளிப்படையாக விமர்சித்தமை தொடர்பிலேயே இந்த வலியுறுத்தலை அவர் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர், கட்சியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தாம் ஆதரவில்லை என்று அண்மையில் குறிப்பிட்டிருந்த சந்திரிக்கா, அதற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் வாக்காளர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

தமது தந்தை ஸ்தாபித்த கட்சியையே சந்திரிக்கா தூற்றுவதாக தென்னக்கோன் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment