Monday, August 24, 2015

சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சார்ந்த எந்தவொரு உறுப்பினரும் தேசிய அரசில் இணைந்து கொள்ள முடியும்: மைத்திரிபால!

Monday, August 24, 2015
சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சார்ந்த எந்தவொரு உறுப்பினரும் தேசிய அரசில் இணைந்து கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அதற்கு விருப்பமற்றவர்கள் கட்சியை விமர்சிக்காது, குழுக்களை அமைக்காமல் எதிர்கட்சியில் தமது இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைவரான ஜனாதிபதி மற்றும் சுதந்திர கட்சியில் இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்ததாக முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

No comments:

Post a Comment