Saturday, August 22, 2015

பூமி மீது விழாது விண்கல்: தேற்றுகிறது நாசா!!

Saturday, August 22, 2015
நியூயார்க் : பூமி மீது விண்கல் மோதாது என்றும், இது போன்று அச்சப்பட தேவையில்லை என்றும், விழுவதற்கான வாய்ப்பு 0.01 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
செப்., 15 மற்றும் 28 தேதிகளுக்குள் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவிருப்பதாகவும், இதனால் பெரும் சேதம் ஏற்படும் எனவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த செய்திகளுக்கு நாசா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள மறுப்பில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது, பூமியில் விண்கல் மோதுவதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. , இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விண்கல்லோ அல்லது வால்நட்சத்திரமோ பூமி மீது விழுவதற்கான வாய்ப்பு 0.01 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment