Saturday, August 15, 2015
தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து செயற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் என்பன நாளையதினம் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதன்படி 12 ஆயிரத்து 314 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதேவேளை எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்பதற்கு தூர பிரதேசங்களில் உள்ள பணியாளர்களுக்கு விடுமுறை வழங்காத தொழில் தருனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இந்த எச்சரிப்பை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment