Monday, August 17, 2015

8ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான முதலாவது தபால்மூல வாக்களிப்பு முடிவு இரவு 7 மணிக்கு முன்னர்!

Monday, August 17, 2015
8ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதுடன்
 
முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 6.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
4.00 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாலை 4.30 மணியளவில் தபால் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
இம்முறை பொதுத் தேர்தலின் பொருட்டு 325 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம்அறிவித்துள்ளது

No comments:

Post a Comment