Wednesday, July 1, 2015

மனிதாபிமானப் பணிகளுக்கான இலங்கை அலுவலகத்தை மூடுகிறது: ஐக்கிய நாடுகளின் அலுவலம்!

Wednesday, July 01, 2015
மனிதாபிமான விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இயற்கை அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதற்கு முகங்கொடுக்கும் தகைமை தற்போது இலங்கைக்கு காணப்படும் நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்படி, இந்த வருட இறுதியில் இலங்கையில் உள்ள தமது அலுவலகம் மூடப்படும் என்று பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பப்புவா நியுகினியில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலம் ஒரு மாதத்தில் மூடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment