Thursday, June 18, 2015

ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் மனு நிராகரிப்பு!

Thursday, June 18, 2015
தமக்கு நாடாளுமன்ற உறுப்புரிமையை மீண்டும் வழங்க கோரி ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று விஜித் மலல்கொட மற்றும் எப்.சீ.ஜே மடவல ஆகிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் படி, குறித்த மனுவினையை நடத்திச் செல்லுமளவிற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று நீதியரசர்கள் குழு இதன்போது தெரிவித்தது.

முன்னர், சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்குமாறு நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு பணிப்புரை விடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த மனுவை சரத் பொன்சேகாவின் செயலாளர் சேனக டி சில்வா தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
            

No comments:

Post a Comment