Friday, June 19, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டி: வாசுதேவ நாணயக்கார!

Friday, June 19, 2015      
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
மஹிந்தவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பு மனு வழங்கத் தவறினால் அவரது தலைமையில் வேறும் ஓர் அரசியல் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடுவோம். ஏற்கனவே இது குறித்து மக்களை தெளிவுபடுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
சில கட்சிகள் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தேர்தலின் போது மஹிந்த தலைமயிலான கூட்டணி 100 ஆசனங்களை வெற்றிக்கொள்வதனை இலக்க வைத்து செயற்பட உள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருபது ஆசனங்கள் எஞ்சியிருக்கும் என நம்புவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment