Monday, June 15, 2015

பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிணை வழங்கியுள்ளது!

Monday, June 15, 2015
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிணை வழங்கியுள்ளது. -

தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுல் இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிரும் தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு டி.வி.உபுலை கைது செய்ததுடன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலிலும் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment